April 1, 2022

Read this article in English | සිංහල | தமிழ்

Mirihana_stfxcf.png

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட பதிவுகளின் ஆதாரங்களைக் கொண்டு தொகுக்கப்பட்ட, மார்ச் 31 இரவு இடம்பெற்ற நிகழ்வுகளின் கால வரிசை

பகுப்பாய்வு : யுதஞ்சய விஜேரத்ன

செம்மையாக்கம் : ஆயிஷா நாஸிம்

ஆரம்பம்

வியாழன் பி.ப. 6 மணியளவில் மிரிஹானை, ஜுபிலி சந்தியில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

https://twitter.com/Sunil_Matara/status/1509523974484418562

8.00 மணியளவில் ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏராளமானோர் ஆர்ப்பாட்ட இடத்திற்கு கால்நடையாகவும், மோட்டார் வாகனங்களிலும் வருகை தந்து இணைந்து கொண்டனர்.

https://twitter.com/newsradiolk/status/1509563273024180225

https://twitter.com/UdiUdz/status/1509544308164206601

https://twitter.com/Welikumbura/status/1509543951836999691

9 மணியளவில் ஆர்ப்பாட்டம், ஜனாதிபதியின் இல்லம் அமைந்துள்ள பெங்கிரிவத்தை வீதிவரை முன்னேறியது.

திருப்புமுனை

இரவு 10 மணியானபோதும், ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.

எமது அவதானத்தின்படி, இரவு 10.10 அளவில் பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீச ஆரம்பித்தனர்.

வன்முறை இங்குதான் ஆரம்பமானது. ஆர்ப்பாட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், வெவ்வேறு சம்பவங்கள் நிகழ்வதைக் காண்பிக்கின்றன. ஒருபுறம், மக்கள் கோஷங்களை எழுப்புகிறார்கள், மறுபுறம், சிலர் வீதித் தடைகளை அகற்றுகிறார்கள். பின்னர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்படுவதும் வீடியோ காட்சிகளில் பதிவாகியுள்ளன.

https://twitter.com/Welikumbura/status/1509575419254743055

https://twitter.com/nuzlyMN/status/1509577175493537792

https://twitter.com/itsPrahas/status/1509583109356134403

வீதியில் நின்றிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதலால் சிதறி ஓடி பின்னர் மீண்டும் குழுக்களாக ஒன்றுகூடினர். பின்னர் தலைக்கவசத்துடன் நின்றிருந்த பலர் கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல் நடாத்திய வாகனம் மீது பொருட்களை வீசி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

https://twitter.com/Dailymirror_SL/status/1509578455221821466